ஷீ மேயு

    இரண்டு பணிகளையும் ஒரே நேரத்தில் செய்வதற்கு ஆண்டவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர் ஷீ மேயு

    இன்று நற்செய்திப் பணியில் மருத்துவப் பணி மிகவும் முக்கியமானது. ஏனெனில் மனிதர்கள் இரண்டு விதங்களில் குணமடைய வேண்டியது அவசியம். ஒன்று, சரீரத்தில் குணமடைதல். மற்றொன்று, ஆவிக்குரிய வாழ்வில் குணமடைதலாகும். சீன மருத்துவ மிஷனெரி ஷிமேயு இரண்டு பணிகளையும் ஒரே நேரத்தில் செய்வதற்கு ஆண்டவரால் தெரிந்து கொள்ளப்பட்டார்.
    இவர் அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்களுடைய கரங்களையும் , சுவிசேஷகர்களுடைய இருதயத்தையும் பெற்றிருந்தார். சீனாவில் பிறந்த இவர், அமெரிக்கா சென்று மருத்துவப் பட்டம் பெற்ற சீனப் பெண்மணி ஆவார். சீன தேசத்து மக்களுக்காக மருத்துவமனை ஒன்றைக் கட்டினார். ஒவ்வொரு மாதமும் 3,000 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார். மேலும் சீன செவிலியர்களுக்கு ஒரு பயிற்சித் திட்டத்தை 2 உழைத்தார். மேற்கத்திய மருத்துவ புத்தகங்களை மொழிபெயர்ப்புச் செய்தார். செவிலியர்களுக்கென்று தனியே வேதாகம வகுப்புகளை நடத்தினார். 1918ல் ஷிமேயு ஐந்து கிறிஸ்தவ தலைவர்களுடன் இணைந்து சீன உள்நாட்டு ஊழிய சங்கத்தை ஏற்படுத்தினார். இது ஒரு சுயநிதி சங்கமாகச் செயல்பட்டது.
    1920ம் ஆண்டு தான் பணியாற்றி வந்த மெதடிஸ்ட் மிஷனெரி சங்கத்தை விட்டு விட்டு பெத்தேல் மிஷன்' என்ற புதிய ஊழியத்தை ஆரம்பித்தார். 17 ஆண்டு காலத்தில் இந்த ஊழியமானது வளர்ச்சி அடைந்தது, ஆரம்ப மற்றும் செகண்டரி பள்ளிகள், மருத்துவமனை, செவிலியர் பள்ளி, வேதாகமகலாசாலை, அனாதை இல்லம் மற்றும் ஆராதனைமையம் ஏற்படுத்தப்பட்டன. ஷிமேயு , 36 சீனக் குழந்தைகளை தன் வீட்டில் வைத்தே பராமரித்தார். ஒவ்வொரு வியாழக்கிழமையும் தன் வீட்டில் செவிலியர்களுக்கென வேதாகமக் கூட்டங்களை நடத்தி அநேக செவிலியர்களை கிறிஸ்துவுக்குள் நடத்தினார்.
    20ம் நூற்றாண்டில் வாழ்ந்த மாபெரும் சீன கிறிஸ்தவ பெண்மணிகளில் டாக்டர். மேயு ஒருவராவார். தனது இடைவிடாத உழைப்பினால் இச்சீன மிஷனெரி ஜுன் 14 நினைவு தினம் 1954ம் ஆண்டு நோயற்ற வீட்டிற்கு பயணமானார்.