திருச்சபையில் சங்கப் பணம் திட்டம் வந்த வரலாறு

திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் நடைபெற்ற கிறிஸ்தவ சமயப் பணிகளுக்கான பணத்தேவையைச் சபைகளிலிருந்தே பெற வேண்டும் என ரேனியஸ் எண்ணினார். எனவே தனது ஆலோசனையை 20.06.1833 அன்று தெரிவித்தார். “ஒவ்வொரு கிறிஸ்தவக் குடும்பத் தலைவனும் ஒரு கால்பணம் அதவாது 23 காசுகள் ஓர் ஆண்டிற்கு ஒரு முறை காணிக்கையாகத் தரவேண்டும், இது சமயப்பணிகளுக்கென்று செலவிடப்படும்" என்று கூறினார். இதுவே *சங்கக்காணிக்கை* என்று பெயர் பெற்றது. ரேனியசின் இந்த ஆலோசனையை அக்காலத்திலிருந்த சுமார் 300 சபைகளில் தெரிவித்தபோது, அக்காலத்திலிருந்த சுமார் 300 சபைகளில் டோனாவூர் ஒன்றைத் தவிர மற்றனைத்தும் அதற்கு ஒப்புதல் தந்தன.

இதற்கான காரணம் டோனாவூர் சபையில் அவ்வப்பொழுது சில பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தவர் 'இராமசாமி' என்பவர். இவர்தான் இவ்வூரில் முதல் கிறித்தவரானவர். சபைத் தலைவராகவும் இருந்தவர். இவர் தனது சபையாரிடம் *“சங்கப்பணம்”* என்ற பெயரில் இப்பணத்தை வசூலிப்பதற்கு மிஷனெரிமார் ஏதோ தகாத காரணங்கள் கொண்டுள்ளார்கள் என்று கற்பனை செய்து சங்கக் காணிக்கை கொடுக்க மனமுடையவர்களையும் கொடுக்கக் கூடாதெனத் தடுத்து விட்டார்எனவே சங்கப் பணம் பெறுவதற்கான சரியான நோக்கத்தை சமய பணியாளர்கள் எடுத்துக் கூறியும் இராமசாமி என்பவர் அதை கேட்கவில்லை.  எனவே, ரேனியதும் அதனை வற்புறுத்திக் கேட்காமல் விட்டு விட்டார் , சில மாதங்கள் சென்ற பின் மீண்டும் டோனாவூரில் காலரா நோய் ஏற்பட்டு 21 போ மரித்தனர் . அதில் 7 பேர் கிறித்தவர்கள்.

கடந்த ஆண்டு ஏற்பட்ட காலராவில் ஒரு கிறித்தவர்கள் கூட மரிக்கவில்லை என்பதை எண்ணிய சபை மக்கள் இது கடவுளின் தண்டனை எனக் கருதி மனம் வருந்தினர். “தாங்கள் சங்கக் காணிக்கையைத் தரமறுத்த பாவத்துக்காகத் தாங்கள் தண்டிக்கப்பட்டதாகப் புலம்பியழுதார்கள். சபைத் தலைவரான இராமசாமி நாடார் உட்பட அனைவரும் மிஷனெரி ஷாப்வற்றனர் ஐயரிடம் ஓடினார்கள். மனப்பூர்வமாக சங்கக்காணிக்கையைக் கொடுத்து விடுவோம் என்று வாக்குப் பண்ணினார்கள். வாதையும் நின்றது. இச்சம்பவமும் டோனாவூரில், மக்கள் கிறித்தவத்தின் மீது பற்றுதல் ஏற்படக் காரணமாக இருந்துள்ளது.